சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மலையாள சினிமாவில் இமேஜ் பற்றி கவலைப்படாத நடிகர் என்றால் நிச்சயமாக அது பிருத்விராஜாகத்தான் இருக்க முடியும்.. அவர் நடித்த மும்பை போலீஸ் படத்தில் அவர் ஏற்று நடித்த கேரக்டரே அதற்கு சாட்சி. அப்படிப்பட்ட கேரக்டரிலேயே (அது சஸ்பென்ஸ்.. படம் பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்) நடித்துவிட்டவருக்கு வில்லன் வேடம் என்றால் மாட்டேன் என்றா சொல்லப்போகிறார்..? அதுவும் ஏற்கனவே 'கனாக்கண்டேன்', 'ராவணன்', 'கிருத்யம்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றவர் தானே.. அதனால் இப்போது மீண்டும் ஒருமுறை வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார் பிருத்விராஜ்..
ஆனால் இது தமிழிலோ அல்லது மலையாளத்திலோ அல்ல.. இந்தியில்.. ஆம்.. கடந்த வருடம் பாலிவுட்டில் அக்சய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் 'பேபி'. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஆனால் இதன் தொடர் பாகத்தை உருவாக்குவதற்கு முன்பாக, இதன் ப்ரீக்வல் எனப்படும் முன்கதையைத்தான் இரண்டாம் பாகமாக உருவாக்குகிறார்கள்.. படத்தின் பெயர் 'நாம் சபானா'.. இந்த இரண்டாம் பாகத்தில் தான் பிருத்விராஜும் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அது வில்லன் கேரக்டர் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. அய்யா, ஔரங்கசீப் ஆகிய படங்களை தொடர்ந்து இந்தியில் இவர் நடிக்கும் மூன்றாவது படமாகும் இது.