'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' |
நடிகர் சல்மான் கானுடன் திருமணம் நடக்க போவதாக வெளியாகி வந்த தகவல்கள் குறித்து லுலியா வென்சர் முதல் முறையாக மவுனம் கலைத்து பதிலளித்துள்ளார். ஹிமேஷ் ரேஸ்ஸாமியாவின் சமீபத்திய ஆல்பமான ஆப் சி மவுசிகு என்ற ஆல்பத்தில் எவ்ரி நைட் அன் டே என்ற பாடலை லுலியா பாடி உள்ளார். இந்தியில் தான் முதல் முறையாக பாடிய இந்த பாடலின் வெளியிட்டு விழாவில் லுலியா நேற்று கலந்து கொண்டார். அப்போது, சல்மான் கானுக்கும், அவருக்கும் இடையேயான உறவு பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அப்போது பதிலளித்த லுலியா, சல்மான் மற்றும் என்னை பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு மீடியாவும் இதை திரும்ப திரும்ப கூறி கொண்டே இருக்கின்றன. ஆனால் நான் சொல்கிறேன், அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே. அதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல? அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனெனில் நான் இந்தியா வருவதற்கு அவர் தான் காரணம். எனக்கு இந்தியா, அதன் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். நான் முதல் முறையாக இந்தியா வந்து விட்டு திரும்பும் போது அழுதேன் என்றார்.