போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நடிகர் சல்மான் கானுடன் திருமணம் நடக்க போவதாக வெளியாகி வந்த தகவல்கள் குறித்து லுலியா வென்சர் முதல் முறையாக மவுனம் கலைத்து பதிலளித்துள்ளார். ஹிமேஷ் ரேஸ்ஸாமியாவின் சமீபத்திய ஆல்பமான ஆப் சி மவுசிகு என்ற ஆல்பத்தில் எவ்ரி நைட் அன் டே என்ற பாடலை லுலியா பாடி உள்ளார். இந்தியில் தான் முதல் முறையாக பாடிய இந்த பாடலின் வெளியிட்டு விழாவில் லுலியா நேற்று கலந்து கொண்டார். அப்போது, சல்மான் கானுக்கும், அவருக்கும் இடையேயான உறவு பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அப்போது பதிலளித்த லுலியா, சல்மான் மற்றும் என்னை பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு மீடியாவும் இதை திரும்ப திரும்ப கூறி கொண்டே இருக்கின்றன. ஆனால் நான் சொல்கிறேன், அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே. அதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல? அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனெனில் நான் இந்தியா வருவதற்கு அவர் தான் காரணம். எனக்கு இந்தியா, அதன் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். நான் முதல் முறையாக இந்தியா வந்து விட்டு திரும்பும் போது அழுதேன் என்றார்.