சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் கால் பதித்து உள்ளனர் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. என்னதான் இந்த இருவரும் சேர்ந்து நடித்தாலும், ஹாலிவுட்டிலும் கால் பதித்தாலும் இருவருக்கும் இடையே மறைமுகமாக ஒருவித யுத்தம் நடந்து தான் வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா பற்றி தீபிகா மனம் திறந்துள்ளார்.
அதில் தீபிகா பேசுகையில், ‛‛எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது, நான் பள்ளியில் படிக்கும்போது பிரியங்கா உலக அழகி பட்டம் பெற்றார். அவரை எனக்கு ரொம்ப நாட்களாகவே தெரியும். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. தான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை அவர் சரியாக செய்து வருகிறார். நான் அவர் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன், அவரைப்பற்றி நன்கு புரிந்து கொண்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.