சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
1984ம் ஆண்டு அக்டோபர் 31ந் தேதி முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா, தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்தது. பலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து 31 அக்டோபர் என்ற இந்திப் படம் தயாராகி உள்ளது. சோஹா அலிகான், வீர்தாஸ், நடித்துள்ள இந்தப் படத்தை சிவாஜி லோதன் பட்டேல் இயக்கி உள்ளார். ஹரி சச்தேவா தயாரித்துள்ளார்.
படம் தணிக்கை குழுவினரின் கெடுபிடிக்குள் பல மாதங்களாக சிக்கி தவித்து வந்தது. இந்த நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அஜெய் கட்டாரா என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ரோகினி, மற்றும் நீதிபதி சங்கீதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான அஜெட் கட்டாரா "இந்தப் படம் நிகழ்கால தலைவரின் சாயலை கொண்ட ஒருவர் வன்முறையை தூண்டுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. முடிந்த பிரச்னையை மீண்டும் தூண்டுவதாக உள்ளது" என்றார்.
தணிக்கை குழுவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தணிக்கைக்கு வந்தது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்படி தயாரிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அவரும் அந்த காட்சிகளை நீக்கினார். அதன் பிறகும் படத்தை பார்த்து. படத்துக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அக்டோபர் 21ந் தேதி படத்தை வெளியிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையடுத்து மனுதாரர் கட்டாராவின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். மனுதாரர் கட்டாரா தணிக்கை குழுவை எதிர்மனுதாராக கொண்ட புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். என்றாலும் படம் 21ந் தேதி வெளிவருவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது.