வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
விநாயகர் சிலை கரைக்கப்பட்ட அன்று, ரிஷி கபூரும் அவரது சகோதரர் ரன்தீர் கபூர் செய்தியாளர்களை அடித்ததுடன், அவர்களிடம் தவறாக நடந்து கொண்டனர். இரண்டு கபூர்களும் செய்தியாளர்களை கடுமையாக தாக்கிய வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக சமீபத்தில் ரிஷி கபூர் கூறுகையில், பாலிவுட்டிற்கு வந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு மீடியாக்களுடன் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. உணர்ச்சிவசப்பட்டு தாக்கி விட்டேன். இது மிகவும் தேவையற்ற செயல். இத்தனை ஆண்டுகளில் இது போல் என்னை பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்னிடம் உண்மையில் என்ன நடந்தது என ஒரு வார்த்தை கூட கேட்காமல் அனைத்து டிவி சேனல்களும் இதனை ஒளிபரப்புகின்றன. அன்றைய தினம் என்னிடம் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க வேண்டும் என மீடியாக்காரர்கள் கேட்டனர்.
அப்போது ரன்பீர் வந்ததும், இருவரையும் சேர்ந்து போஸ் கொடுக்கும்படி கூறினர். நாங்களும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம். அப்படி இருந்தும் மீடியாக்கள் விடவில்லை. நாங்கள் சொல்வதை கேட்கவில்லை. கட்டுப்படுத்த முடியாமல் போனதால், விலகி செல்லும்படி சிலரை நான் தள்ளி விட்டேன். ஆனால் ரன்பீர் என்னை போன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவில்லை. எதற்காக அவரை இதில் இழுக்க வேண்டும்? இது போன்ற பேச்சுக்களால் வெறுத்து விட்டேன். நான் யாரையும் அடிக்கவில்லை. அது திரித்து கூறப்பட்டுள்ளது. ஒருவேளை நான் யாரையாவது அடித்திருந்தால், ஏன் அவர்களின் முகம் அதில் தெரியவில்லை? மக்கள் அந்த வீடியோ சரியாக பார்க்கவில்லை. ஆனால் அனைவரும் தீர்ப்பை மட்டும் சொல்கிறார்கள். ரன்பீர், கூடி இருந்தவர்களை விலகி போக மட்டும் தான் கூறினார் என்றார்.