சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மும்பையில் டென்னிஸ் விராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடந்தது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் சானியா மிர்சா பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:
என்னையும் சினிமாவையும் தொடர்பு படுத்தி அடிக்கடி செய்திகள் வருகிறது. நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா? என்ற கேள்வி அடிக்கடி என்னை நோக்கி கேட்கப்படுகிறது. என்னால் சினிமாவில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நடிக்கும் எண்ணம் இல்லை. தயாரிப்பாளர் பராக்கான் எனது நல்ல நண்பர். அவர் என் கதையை சினிமாவாக எடுக்கப்போவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. இதுவரை யாருக்கும் அந்த அனுமதியை நான் வழங்கவில்லை.
என் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கபடுமா என்பது எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையை சினிமாவாக எடுத்தால் அது எனக்கு கிடைத்த கவுரவமாக நினைப்பேன். எனது பாத்திரத்தில் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, ப்ரீணி சோப்ரா பொருத்தமாக இருப்பார்கள். ப்ரீணிதி சோப்ரா என் சாயலில் இருப்பார். அவர் நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றார் சானியா மிர்சா.