சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமீபத்தில் சர்ச்சையுடன் வெளியான படம் ‛உட்தா பஞ்சாப்'. இப்படத்தில் ஷாகித் கபூர், ஆலியாபட், கரீனா கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இவர்களில் ஆலியாபட்டின் ரோல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஆலியா, பீகார் பெண்ணாக நடித்திருந்தார். ஆலியாவின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஷாகித் கபூர், சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இப்போது அதே கருத்தை நடிகை கரீனா கபூரும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கரீனா மேலும் கூறியதாவது... ‛‛ஷாகித் கபூர் சொன்னதை நான் ஏற்கிறேன். உட்தா பஞ்சாப் படத்தில் ஆலியாவின் நடிப்பு அருமையாக இருந்தது. ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரின் நடிப்பை பாராட்டினார்கள். தேசிய விருதுக்கு ஆலியா தகுதியானவர், அவருக்கு விருது கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.