சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் ஷாரூக்கான்-ரோகித் ஷெட்டி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தில்வாலே. இப்படத்தில் ஷாரூக்கான் உடன் ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு கஜோலும் சேர்ந்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கடந்தவாரம் டிச.18ம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. விமர்சன ரீதியாக இப்படம் நன்றாக இல்லை என்றே கருதுகின்றனர். ஆனாலும் இப்படம் மூன்று நாளில் ரூ.100 கோடி வசூலை எட்டியிருக்கிறது. ஆனாலும் இந்த வசூல் குறைந்துள்ளதாக ரோகித் ஷெட்டி கூறுகிறார்.
இதுப்பற்றி ரோகித் கூறியிருப்பதாவது... தில்வாலே படத்துடன் பாஜிராவ் மஸ்தானி படமும் வெளியாகும் என்று தெரியும். ஆகையால் தான் அதற்கு ஏற்றபடி தில்வாலே படத்தை மெருகேற்றினோம். ஆனால் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இப்படத்தின் வசூல் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இப்படத்திற்கு தடை உள்ளது. கிட்டத்தட்ட 40 தியேட்டர்களில் தில்வாலே படம் வெளியாகவில்லை. ஆகையால் தான் படத்தின் வசூல் குறைந்தது என்று கூறியுள்ளார்.