நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்களும் இரங்கற் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ( கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் நண்பி) அப்துல் கலாம் மறைவு குறித்து, டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுஷ்கா சர்மா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது., ஏபிஜே கலாம் ஆசாத்தின் மறைவு செய்தி தன்னை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது டுவிட்டர் பாலோயர்கள், தவறை சுட்டிக்காட்டினர். உடனே, அந்த டுவிட்டை டெலீட் செய்த அனுஷ்கா சர்மா, அடுத்ததாக, மறுபடியும்
ஏபிஜே கலாம் ஆசாத்திற்காக வேண்டிக்கொள்கிறேன் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன் என்று டுவிட் போட்டார்.
இந்த டுவிட்டிலும், பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதை, அவரது பாலோயர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து
ஏபிஜே அப்துல் கலாமின் மறைவு செய்தி தன்னை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று சரியாக டுவிட் செய்தார்.