சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லையா என்று புலம்பும் அளவுக்கு பல சர்ச்சைகளில் சிக்கி சிப்ஸாக பொறித்துவிட்டார்கள் இயக்குநர் ராம் கோபால் வார்மாவை, தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை வேண்டுமென்றே கிளப்பியதுபோல் தெரிகிறது இவர் செய்த வேலை.நேற்று உலக கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின, பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றது, இந்தியா தோற்றது கூட இப்ப பிரச்சனையில்லை ராம் கோபால் வர்மா அவரது ட்விட்டரில் எழுதியது தான் தற்போது தீயாக பற்றிக் கொண்டிருக்கிறது. “கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா தோற்றது எனக்கு மிகவும் மகிச்சியை தந்துள்ளது, ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் சுத்தமாக பிடிக்காது, அந்த 11 பேர் ஆடுவதை பார்க்க பல லட்சம் பேர் வேலைக்கு லீவ் போட்டு இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை, ஒருவழியாக நேற்று இந்தியா தோற்றுவிட்டது இனி மக்கள் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். இப்படி ஒரு கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் என் நாட்டு மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். மேலும் இனிமேல் இந்தியா ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் எதிரணியிடம் தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சிகரெட், குடிப்பழக்கம் இரண்டும் உடலை மட்டுமே நாசம் செய்யும், ஆனால் கிரிக்கெட் ஒட்டுமொத்த என் தேசத்தையே நாசம் செய்து கொண்டிருக்கிறது.” என்று ட்விட்டரில் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.