சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஏ.ஐ.பி,.ரோஸ்ட் நிகழ்ச்சி தொடர்பாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை, வரும் 16ம் தேதி வரை கைது செய்வதிலிருந்து இடைக்காலத்தடை விதித்து, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.ஐ.பி.ரோஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், அனைவரின் முன்பு, தீபிகாவை கட்டியணைத்து, ரன்வீர் சிங் முத்தமி்ட்டார். இதற்கு, தீபிகா படுகோனேவும், எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், ரன்வீர் சிங்கிற்கு ஒத்துழைப்பு தந்தார். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த, சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட பலர் இதற்கு ஆதரவு தெரிவித்து கரகோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பொதுநிகழ்ச்சியில், இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறி, முன்னணி வக்கீல் ஒருவர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, ரன்வீர்சிங், தீபிகா படுகோனே, அர்ஜூன் கபூர், சோனாக்ஷி சின்கா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.