சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட் படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது கனவு என்று நடிகை அக்ஷரா ஹாசன் கூறியுள்ளார்.
உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், திரையுலகில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசனும், ஷமிதாப் படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். ஷமிதாப் படத்தில், பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், மற்றும் தனுஷ் உடன் அக்ஷரா நடித்துள்ளார். அமிதாப் மற்றும் தனுஷ் உடன் நடித்த அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்..
ஷமிதாப் உங்களது முதல் படம்? எப்படி உணர்கிறீர்கள்?
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படம் இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. நான் நடித்த படம் முதல்படம் என்பதால், மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன். முதல் படத்திலேயே, நான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். இந்த படத்தில் நடித்திருக்கவில்லையென்றால், என்னுடைய லெவல் என்பது என்னவென்று எனக்கு தெரியாமலேயே இருந்திருக்கும். இந்த படம் வெளியானபின்னர், பாலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.
முதல் படமாக ஷமிதாப்பை எதற்கு தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் திரையுலகில் வர வேண்டும் என்று நினைத்தபோதே, எனக்கு பல்வேறு வாய்ப்புகள் தேடிவந்தன. ஆனால், அவற்றை எல்லாம் நான் நிராகரித்துவிட்டேன். ஏனென்றால், அப்போது தான் மனதளவில் தயாராகவில்லை என்பதே உண்மை. பின், திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற வெறி வந்து, உடலளவிலும், மனதளவிலும் தயாரான நேரத்தில் தான், ஷமிதாப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படத்தின் கதையும் பிடித்து இருந்தது, பால்கி சாரின் இயக்கத்தில் நடிக்க பலர் விரும்பும்நிலையி்ல், முதல் படத்திலேயே அவர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உடனே படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டேன்.
படத்தில் உங்களது கேரக்டர் குறித்து...
ஷமிதாப் படத்தில், பத்திரிகையாளர் கேரக்டரில் நான் நடித்துள்ளேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இதுவரை, நான் பத்திரிகையாளரை பார்த்தது கூட இல்லை. எனவே, பத்திரிகையாளர் கேரக்டர் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. படத்தில், பத்திரிகையாளர் கேரக்டர் செய்ய வேண்டும் என்று டைரக்டர் பால்கி சொன்னவுடன், பத்திரிகையாளரின் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தேன். அவர்களது மேனரிசத்தை தொடர்ந்து கண்காணித்து, என்னை, பத்திரிகையாளர் கேரக்டருக்கு தயார்படுத்திக்கொண்டேன். இந்த படத்தில், அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் இருவரும் சந்திக்க வைக்கும் பாலமாக என் கேரக்டர் உள்ளது.
முதல் படத்தில் முழுமை பெற்றுவிட்டதாக நினைக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. யாராலும், முதல் படத்திலேயே, நான் முழுமையடைந்துவிட்டேன் என்று கூறிவிட முடியாது. ஆனால், இந்த படத்தில் நான் நடிக்கும்போது, ஒருவித உற்சாகத்தில் இருந்ததை உணர்ந்தேன். இந்த படத்தில், ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்கும் வகையில், நான் நடிக்க முயற்சித்துள்ளேன். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதை இந்த படத்தில் நிறைவேற்றியுள்ளேன் என்று நினைக்கிறேன்.
2 மெகா ஸ்டார்களுடன் நடித்த அனுபவம் குறித்து..
முதல் படத்திலேயே, அமிதாப் பச்சன், தனுஷ் என இரண்டு மெகாஸ்டார்களுடன் நடித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 2 மெகா ஸ்டார்களுடன் நடித்தது இனிய அனுபவமாக இருந்தது. அவர்களுடன் நடித்த இந்த அனுபவத்தை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அமிதாப் பச்சன், பால்கி, தனுஷ் உள்ளிட்டோர் என்னை, அவர்களின் குழந்தைகளாகவே பாவித்தனர்.
நடிப்பில் உங்கள் பெற்றோரை முந்திவிட்டீர்களா?
நிச்சயமாக இல்லை. நடிப்பில் அப்பா கமலஹாசன், பல அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். நடிப்பில், என்னை அவரோடு ஒப்பிட்டு பேசுவதே, தவறான ஒன்று ஆகும். அம்மா சரிகாவின் பல்வேறு குணாதிசயங்களை நான் தன்னகத்தே வைத்துள்ளேன். என்னை முதன்முதலாக பார்க்கும் பலர், அப்படியே, சரிகாவை பார்த்தது போலவே உள்ளதாக கூறியுள்ளனர். எனது அம்மா, அமைதியானவர், அனுபவம் மிக்கவர், நன்றாக எழுதும் திறம் படைத்தவர். அத்தகைய அவரது குணாதிசயங்கள் எனக்கும் உண்டு. நான் எழுதியதை பாராட்டி, அம்மா எனக்கு ஒரு பேனாவை பரிசளித்தார். அதுதான் எனது முதல் சம்பளம். அதை பெறும்போது நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
ஹிந்தி படங்களில் மட்டும் தான் நடிப்பீர்களா?
ஹிந்தி படத்தில் நான் அறிமுகமானதால், ஹிந்தி படங்களில் மட்டும் நடிப்பேன் என்று கருதிவிட முடியாது. தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஷமிதாப் படத்தின் ரிலீசிற்கு பிறகு, தமிழ் அல்லது ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளேன். தமிழ் படங்களில் நடிக்கவே, தான் விரும்புகிறேன்.
பாலிவுட்டில் உங்கள் பேவரைட் யார்?
நான் ஷாரூக் கானின் தீவிர ரசிகை. பாலிவுட் திரையுலகின் நிகரற்ற ஹீரோ என்றால், அது ஷாரூக் கான் தான். ஒரு விளம்பர சூட்டிங்கின்போது, அவரை முதல்முறையாக சந்தித்தேன். அவரிடம் நான் பேச தயங்கியபோது, அவரே முன்வந்து என்னிடம் பேசினார். என்னை கட்டிப்பிடித்த அவர், நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறினார். அப்போதே, நான் உங்கள் தீவிர ரசிகை என்பதை கூறிவிட்டேன் என்று அக்ஷரா ஹாசன் கூறினார்.