சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயக்குனர் பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்ஷன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் அவர் மீண்டும் தமிழ் படத்துக்கு திரும்புகிறார் என்ற பேச்சு இருந்தது. ஆனால் பிரபுதேவா மீண்டும் இந்திப்படம் இயக்குகிறார்.
சிங் இஸ் பிளிங் என்பது அடுத்த படத்தின் டைட்டில் இதிலும் அக்ஷய்குமார்தான் ஹீரோ. கீர்த்தி சனம் ஹீரோயின். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா, கோவா, மும்பை, பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. மேற்கண்ட இடங்களுக்கு சென்று லொக்கேஷன் தேர்வு செய்து விட்டு வந்திருக்கிறார் பிரபுதேவா.
இதற்கிடையில் பிரபல தமிழ் க்ரைம் நாவல் எழுத்தாளரான ராஜேஷ்குமாரின் வெல்வெட் குற்றங்கள் நாவலை பிரபுதேவா இந்தியில் சினிமாவாக எடுக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெல்வெட் குற்றங்கள் சமீபத்தில் ராஜேஷ்குமார் ஒரு வாரஇதழில் தொடர்ந்து எழுதிய நாவல். விமானக் கடத்தல் தொடர்பான பரபரப்பான நாவல். இந்த நாவலை படமாக்குவது குறித்து பிரபுதேவா ராஜேஷ்குமாருடன் பேசி வருகிறார். பிரபுதேவா அடுத்து இயக்கும் படமான சிங் இஸ் பிளிங், ராஜேஷ்குமார் கதையா, அல்லது வேறு கதையா என்று தெரியவில்லை.
ராஜேஷ்குமார் எழுதிய அகராதி, சிறுவாணி நாவல்கள் ஏற்கெனவே திரைப்படமாகியிருக்கிறது. தற்போது 2 ஆயிரம் அடி சொர்க்கம் என்ற நாவல் படமாகி வருகிறது. சரத்குமாரின் சண்டமாருதம் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் ரஜேஷ்குமார்.