சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் நடிகை சானா கானும், அவரது காதலர் இஸ்மாயில் கானும் போலீசால் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் இருவருக்கும் அன்றைய தினமே அந்தேரி கோர்ட் ஜாமீன் வழங்கியது.
நடிகை சானா கானும், அவரது காதலர் இஸ்மாயில் கானும் இணைந்து பெண் ஒருவருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன், பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் சானா கானும், இஸ்மாயிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 22ம் தேதியன்று நடிகர் சாகில் கானுக்கும், இஸ்மாயிலுக்கும் இடையே ஜிம்மில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சாகில் அளித்த புகாரின் பேரிலும் இஸ்மாயில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காலையில் கைது செய்யப்பட்ட சானா கானும், அவரது காதலரும் பிற்பகலில் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.