சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களே எந்தவித தயக்கமும் இன்றி அயிட்டம் பாடல்களில் நடனமாடுவார்கள். ஆனால் அனுஷ்கா சர்மா மட்டும் இதுவரை பல வாய்ப்புகள் தேடிச்சென்றபோதும் அதை ஏற்கவில்லை. காரணம், அயிட்டம் பாடல் என்கிறபோது அதிக ஆடைகுறைப்பு செய்யச்சொல்வார்கள் என்பதால் அந்த வாய்ப்புகளை கட்டாயமாக தவிர்த்து வந்தார்.
ஆனால், இப்போது ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா நடிக்கும் தில் தடக்னே டு என்ற படத்தில் முதன்முறையாக ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். காரணம், இந்த படத்தை இயக்குவது ஜோயா அக்தர் என்ற பெண் இயக்குனராம். அவரது படங்களில் ஆபாசத்துக்கு எப்போதுமே தடைதானாம். அதனால்தான் தன்னை அளவுக்கதிகமாக தோலுரிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நடித்தாராம் அனுஷ்கா சர்மா.
அவரது நம்பிக்கையை வீணடிக்காத வகையில், ஜோயா அக்தரும் அவரை பக்கா டீசன்டாகவே உடையணிய வைத்து ஆட வைத்திருக்கிறாராம். மேலும், அதே பாடலில் படத்தின் ஹீரோ ரன்வீர்சிங், ஹீரோயின் பிரியங்கா சோப்ரா ஆகியோரும்கூட அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார்களாம். இந்த வாய்ப்பினை பெருமையாக கருதும் அனுஷ்கா சர்மா, இந்த தில் தடக்னே டு என திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படமாகி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.