வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
2012-ல் இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான படம் கஹானி. அப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதையடுத்து, சித்தார்த்ராய் கபூரை திருமணம் செய்து கொண்டார். அப்போதே அவருக்கு 34 வயதாகியிருந்ததால் அதையடுத்து வித்யாபாலன் நடிப்புக்கு முழுக்குப்போட்டு விட்டு முழுநேர இல்லத்தரசியாகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திருமணம் எனக்கு ஒரு தடையே இல்லை என்று மறுபடியும் தன்னை மையப்படுத்தும் கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் வித்யாபாலன். அதனால் கஹானியைத் தொடர்ந்து பெராரி கி சவாரி, பம்பாய் டாக்கீஸ், கன்சக்கார் என பல படங்களில் நடித்த வித்யாபாலன் தற்போது ஷாதி கி சைட் எபக்ட், பாபி ஜசூஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அதனால் அடுத்தபடியாகவும் ஹீரோயினை மையப்படுத்தும் கதைகளாக நடிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் மேரிகோம் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இப்போது பாலிவுட்டில் தனிப்பெரும் நாயகியாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் அடுத்தபடியாக இந்தியாவின் முதல் பெண் உயர் போலீஸ் அதிகாரியான கிரண்பேடி வேடத்தில் நடிக்கவும் பிரியங்கா சோப்ராவுக்காகத்தான் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதனால் தனக்கான இடத்தை பிரியங்கா சோப்ரா கைப்பற்றி விடுவாரோ என்று அதிர்ச்சியில் காணப்படுகிறாராம் வித்யாபாலன்.