பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
ராணி முகர்ஜி நடித்து வெளிவந்துள்ள 'மர்தானி' திரைப்படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதால் அந்தப் படத்தை சிறுவர், சிறுமிகள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் கோமடைந்துள்ளார் படத்தின் நாயகியான ராணி முகர்ஜி. இந்தப் படம் சிறுமிகள் கடத்தலைப் பற்றிய கதையை மையமாகக் கொண்ட படம். பத்து, பதினைந்து வயது உள்ள சிறுமிகள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது தனியாகச் செல்லக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ள படம். இப்படிப்பட்ட படத்தை அந்த வயதில் உள்ள சிறுமிகள் பார்த்தால்தானே படத்தை எடுத்ததற்கான அர்த்தம் கிடைக்கும் என்கிறார் ராணி முகர்ஜி.
படத்தைப் பார்த்த பல பெண்களும் இப்படத்தை சிறுமிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஆமிர் கான் இப்படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாம் என்று சொல்லி தேவையற்ற சர்ச்சை ஒன்றை கிளப்பியிருக்கிறார். அவர் மட்டும் நிர்வாணமாக போஸ் கொடுத்துவிட்டு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்வது நியாயமா எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இப்படத்திற்குஎந்த அடிப்படையில் 'ஏ' சர்டிபிகேட் வழங்கினார்கள் என சென்சார் போர்டிடம் கேள்வி எழுப்புகிறார் ராணி முகர்ஜி. எதை வைத்து படத்தை வேறுபடுத்துகிறார்கள் என்பது புரியவில்லை. சில வெளிநாடுகளில் உள்ளதைப் போல 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என வரைமுறையை கொண்டு வரலாமே என்கிறார்.
நியாயமான கேள்விதானே...நிறைவேற்றுவார்களா....?