அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
எத்தனையோ விலங்குகள் இருந்தபோதும் நாய்கள் மீது மட்டும் என்னவோ நடிகைகளுக்கு பாசம் மிகுதியாக உள்ளது. அந்தவகையில், கோலிவுட்டைச் சேர்ந்த த்ரிஷா, சமந்தா போன்ற நடிகைகள் சமீபகாலமாக தெரு நாய்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இறங்கி அவற்றுக்கு உதவி செய்வதோடு, யாராவது நாய்களை துனபுறுத்தினாலும் எச்சரிக்கை விடுகிறார்கள்.
இவர்களைப் போலவே பாலிவுட் நடிகை இஷா குப்தாவுக்கும் நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அதனால் தனது வீட்டில் பல தெரு நாய்களை வளர்த்து வருகிறாராம். அந்த நாய்களை பராமரிக்கவே ஒரு பெருந்தொகையை செலவு செய்து வரும் இஷா குப்தா, யாராவது நாய்களை துன்புறுத்தும் விசயம் அறிந்தால் அவர்களை தேடிப்பிடித்து சண்டை செய்கிறாராம்.
அதோடு, நாய்களை அடிப்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் ஆவேசமாக குரல் கொடுத்து வரும் இஷாகுப்தா, நாய்களை தாக்குவதால் அதன் உறுப்புகள் பாதிக்கப்படும் அதனால் உறுப்புக்கு உறுப்பு என்கிற முறையில் தாக்குபவர்களின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும். அப்படி கடுமையான தண்டனை கொடுத்தால்தான் வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தும் எண்ணம் யாருக்கும் வராது என்று கூறியுள்ள இஷாகுப்தா, யாராவது நபர்கள் நாயை அடிப்பதை கண்டால் என்னிடம் பிடித்து தாருங்கள் அதற்கு சன்மானமாக உங்களுக்கு ஒரு லட்சம் தருகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.