நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
பாலிவுட்டில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே சம்பளத்தில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது என நடிகைகள் வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார்கள். ஆனால், நடிகை கரீனா கபூர் , எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது, இது விஷயமாக எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
“பெரிய பட்ஜெட் படமாக இருந்தால், எனக்கு என்ன சம்பளம் தர வேண்டுமோ அதைக் கொடுத்து விடுகிறார்கள். ஒருவருக்கு கிடைப்பது மற்றவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஒவ்வொரு நடிகருக்கும், நடிகைக்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக, 'டர்ட்டி பிக்சர்' படத்தில் என்னால் நடித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு பொறுமையும், தைரியமும் எனக்குக் கிடையாது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் 'கோல்மால் 3' போன்ற படங்களில் நடிப்பது சவாலான ஒரு விஷயம். 'சிங்கம்' போன்ற படங்களில் நடிப்பதே எனக்குப் பெருமைதான். யாருடனும் யாரையும் ஒப்பிடக் கூடாது,” என்றார்.
'டர்ட்டி பிக்சர்' போன்ற படங்களில் வித்யா பாலன் நடித்த பிறகு நடிகைகளுக்கு இந்தியத் திரையுலகில் நல்ல எதிர்காலம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதே சமயம், நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சரிசமமான சம்பளம் கிடைக்க சண்டை போடுவேன் என்றும் தெரிவித்தார். திருமணமான பின் கரீனா, அஜய் தேவகன் ஜோடியாக நடித்துள்ள 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ளது.