சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
2002ம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் மது குடித்து விட்டு தாறுமாறாக கார் ஓட்டிச்சென்ற இந்தி நடிகர் சல்மான்கான், சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். அதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, நடந்த வழக்கில் சல்மான்கானுக்கு எதிர்ப்பாக சாட்சிகள் கூறப்பட்டதால், இப்போது இந்த வழக்கில் வசமாக சிக்கியிருக்கிறார் சல்மான்கான்.
இந்த நிலையில், தற்போது மும்பை ஐகோர்ட்டில் சல்மானின் வழக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதையடுத்து, அவர் வழக்கும் நடைபெறுவதை டி.வி சேனல்களில் ஒளிபரப்பு செய்து வருவதால் இன்னும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சல்மான்கான், தனது வழக்கை டி.வியில் ஒளிபரப்புவது தனக்கு அவமரியாதையாக இருக்கிறது, அதனால் அதை ஒளிபரப்புவதை தடை செய்ய வேண்டும் என்று இப்போது ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இதையடுத்து, சல்மான்கானின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, அவரது கோரிக்கையை ஏற்று, அவரது வழக்கை டிவியில் ஒளிபரப்புவது மட்டுமின்றி, இணையதளங்களில் வெளியிடுவதற்கும் தடை விதித்துள்ளாராம். இதைத் தொடர்ந்து மே 21-ம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சல்மானின் வழக்கு அடங்கிய வீடியோ கேசட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.