எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், நடிகரான ரன்பீர் சிங் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தங்களது குடும்பத்தாருடன் வசிக்க மும்பை, பாந்த்ரா மேற்குப் பகுதியில் 250 கோடி ரூபாய் செலவில் கனவு இல்லம் ஒன்றை அவர்கள் கட்டி வருகிறார்கள். அதன் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு ஆலியா பட் அவரது மாமியார் நீத்து கபூர் உடன் வீட்டை மேற்பார்வையிட்டுள்ளார். விரைவில் கிரஹப்பிரவேச நிகழ்ச்சியை நடத்துவதற்காகவே அவர்கள் சென்று விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மிகவும் ஆடம்பரமாக ஆறு அடுக்கு மாடியாக அந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டிற்கு ரன்பீர் பாட்டி கிருஷ்ணா ராஜ் கபூர் நினைவாக கிருஷ்ணா ராஜ் என்ற பெயரை வைத்துள்ளார்களாம். மாடர்னாகவும், கலாச்சாரத்துடனும் அந்த வீட்டை கடந்த சில வருடங்களாக பார்த்துப் பார்த்து கட்டி வருகிறார்கள்.