'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
கூக்கி குலாட்டி மற்றும் ராபி குரோவால் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி உள்ள படம் ‛ஜூவல் தீப் - தி ஹீஸ்ட் பிகின்ஸ்'. சைப் அலிகான், ஜெய்தீப் அஹ்லாவத், நிகிதா தத்தா மற்றும் குணால் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். திருட்டு தொடர்பான ஆக் ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதில் சாகச மனப்பான்மை மற்றும் குடும்பத்தின் மீது ஆழ்ந்த அன்பு கொண்ட அழகான முரடனாக ரெஹான் ராயாக சைப் நடித்துள்ளார். இந்த படம் இன்று(ஏப்., 25) நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
சைப் அலிகான் கூறுகையில், ‛‛திருட்டு தொடர்பான படத்தில் திருடனாக நடித்திருப்பது சுவாரஸ்யமாக இருந்தது. ஏனென்றால் இதில் எனது கேரக்டர் சவால்கள் நிறைந்தது. அவனுக்கு எந்த விதிமுறையும் கிடையாது. சாகசக்காரனாகவும், குடும்ப தலைவனாகவும் நடித்துள்ளேன். ஹீரோவை இந்த மாதிரி வேடத்தில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
இதுபோன்ற வாய்ப்புகள் எப்பவும் வராது. துப்பாக்கிகளுடன் கூடிய மாபியா டான்கள், சிவப்பு வைரங்களின் உலகம், அருங்காட்சியங்களை கொள்ளை அடிப்பது என சாகசமும், அதிரடியும் நிரம்பி இருக்கும். படத்தில் எனது ரெஹானின் கதாபாத்திரம் அருமையானது. படப்பிடிப்பு தளத்திலும் மிகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி'' என்றார்.