கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி |
பாலிவுட்டில் கடந்த வாரம் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த சாவா என்கிற திரைப்படம் வெளியானது. சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜி மன்னனின் வாழ்க்கை வரலாறை தழுவி வரலாற்று படமாக இது உருவாகி இருந்தது. சாம்பாஜி மன்னனாக விக்கி கவுசலும் அவரது மனைவி ஏசுபாயாக ராஷ்மிகாவும் நடித்திருந்தனர். லக்ஷ்மன் உடேகர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது சத்ரபதி சிவாஜியின் 395வது வருட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜியின் வரலாற்றை பற்றி, அவர் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள் பற்றி உருவாகி இருக்கும் சாவா திரைப்படத்திற்கு வரி விளக்கு அளிப்பதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார் இதனால் படக்குழுவினர் உற்சாகமரிந்துள்ளனர்.
அதே சமயம் இந்த படம் வெளியாவதற்கு முன்பு வெளியான இந்தப்படத்தின் பாடல் டீசர் ஒன்றில் சாம்பாஜி மன்னன் ஆடிப் பாடுவதாக ஒரு காட்சி இடம் பெற்றது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அந்த காட்சியை நீக்காவிட்டால் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டிய இருக்கும் என்று மகாராஷ்டிரா அரசு கடுமை காட்டிய நிலையில் தற்போது இன்னொரு மாநிலமான மத்திய பிரதேச அரசு இந்த படத்திற்கு வரி விளக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.