அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
பாலிவுட்டில் கடந்த வருடம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '12வது பெயில்'. விது வினோத் சோப்ரா இயக்கிய அந்தப் படத்தில் விக்ராந்த் மாசே கதாநாயகனாக நடித்திருந்தார். ஓடிடி தளத்திலும் பின்னர் வெளியாகி அப்படம் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.
2013ல் வெளிவந்த 'லூடேரா' படத்தில் அறிமுகமாகி கடந்த 14 வருடங்களாக நடித்து வருகிறார் விக்ராந்த். சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்துதான் கொஞ்சம் வயதானதும் ஓய்வு பெறுவார்கள். அது போல விக்ராந்த் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
“கடந்த சில வருடங்களும் அதற்குப் பின்னும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்கள் அனைவரவு ஆதரவுக்கும் நன்றி. நான் முன்னோக்கி செல்கிறேன் ஆனாலும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக மற்றும் ஒரு நடிகராகவும் வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை உணர்கிறேன்.
காலம் சரியாக அமைந்தால் 2025ல் கடைசியாக ஒருவரை ஒருவர் நாம் சந்திப்போம். கடந்த இரண்டு படங்கள் மற்றும் பல வருட நினைவுகளுடன் மீண்டும் அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் என்றென்றும் கடன்பட்டுள்ளேன்” என தனது ஓய்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
70 வயதைக் கடந்த பின்பும், பேரன், பேத்திகள் எடுத்த பின்பும் இந்திய சினிமாவில் பலர் இன்னும் நடித்து வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் விக்ராந்த் மாசே தனது 37வது வயதில் ஓய்வு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.