'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா, ராய் அபிஷேக் பச்சன் தம்பதிக்கு 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி வேடத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் திருமணத்தின் போது தனது கைவிரலில் அபிஷேக் பச்சன் அணிந்த மோதிரத்தை கழட்டி இருந்தார் ஐஸ்வர்யா ராய். ஆனால் அதையடுத்து இந்த விவாகரத்து குறித்த கேள்விக்கு ஒரு பேட்டியில் மறுப்பு தெரிவித்திருந்தார் அபிஷேக் பச்சன்.
என்றாலும் அந்த செய்தி தொடர்ந்து பரவி வந்தது. அதனால் அந்த சர்ச்சைக்கு நிரந்தர முடிவு கட்டும் விதமாக தற்போது மீண்டும் அந்த மோதிரத்தை தனது விரலில் அணிந்தபடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ஐஸ்வர்யாராய்.