ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா, ராய் அபிஷேக் பச்சன் தம்பதிக்கு 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி வேடத்தில் நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் திருமணத்தின் போது தனது கைவிரலில் அபிஷேக் பச்சன் அணிந்த மோதிரத்தை கழட்டி இருந்தார் ஐஸ்வர்யா ராய். ஆனால் அதையடுத்து இந்த விவாகரத்து குறித்த கேள்விக்கு ஒரு பேட்டியில் மறுப்பு தெரிவித்திருந்தார் அபிஷேக் பச்சன்.
என்றாலும் அந்த செய்தி தொடர்ந்து பரவி வந்தது. அதனால் அந்த சர்ச்சைக்கு நிரந்தர முடிவு கட்டும் விதமாக தற்போது மீண்டும் அந்த மோதிரத்தை தனது விரலில் அணிந்தபடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ஐஸ்வர்யாராய்.