'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தெலுங்கு திரையுலகில் ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து, கடந்த பத்து வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஜெகபதி பாபு. குறிப்பாக தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு மோஸ்ட் வான்டெட் வில்லன் என்றால் டிக் செய்யப்படுவதில் முதல் ஆளாக இவர் இருக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட்டிலும் நுழைந்து சல்மான்கானுடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் வில்லனாக நடித்த இவர் மீண்டும் சல்மான் கானுடன் இணைந்து இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல இளம் நடிகர் ஆயுஷ் சர்மாவுடன் இணைந்து ருஸ்லான் என்கிற படத்திலும் நடித்துள்ளார் ஜெகபதி பாபு. சல்மான்கானுடன் இணைந்து நடிக்கும் போது ஜெகபதி பாபுவிடம் பேசிய சல்மான் கான், “உங்களது நடிப்பு திறமை மிகப்பெரியது. பெரிய நிறுவனங்கள் என்று பார்க்காமல் நல்ல கதை அம்சம் கொண்ட, நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடியுங்கள்” என்று கூறினாராம்.
இந்த ருஸ்லான் படத்திற்கு முன்பாக அவர் அப்படி சொன்ன அறிவுரையை பின்பற்றி தான் இந்த படத்திலே நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஜெகபதி பாபு.