ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தெலுங்கு திரையுலகில் ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து, கடந்த பத்து வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஜெகபதி பாபு. குறிப்பாக தெலுங்கை தாண்டி தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு மோஸ்ட் வான்டெட் வில்லன் என்றால் டிக் செய்யப்படுவதில் முதல் ஆளாக இவர் இருக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் பாலிவுட்டிலும் நுழைந்து சல்மான்கானுடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் வில்லனாக நடித்த இவர் மீண்டும் சல்மான் கானுடன் இணைந்து இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல இளம் நடிகர் ஆயுஷ் சர்மாவுடன் இணைந்து ருஸ்லான் என்கிற படத்திலும் நடித்துள்ளார் ஜெகபதி பாபு. சல்மான்கானுடன் இணைந்து நடிக்கும் போது ஜெகபதி பாபுவிடம் பேசிய சல்மான் கான், “உங்களது நடிப்பு திறமை மிகப்பெரியது. பெரிய நிறுவனங்கள் என்று பார்க்காமல் நல்ல கதை அம்சம் கொண்ட, நல்ல கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடியுங்கள்” என்று கூறினாராம்.
இந்த ருஸ்லான் படத்திற்கு முன்பாக அவர் அப்படி சொன்ன அறிவுரையை பின்பற்றி தான் இந்த படத்திலே நடிக்க நான் ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஜெகபதி பாபு.