சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை தொடர்பாக, அவர் சரண் அடைய மேலும் 4 வார கால அவகாசம் அளித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.
1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர், உயிரிழந்தனர். இந்த வழக்கில், சட்ட விரோதமாக, ஆயுதங்கள் வைத்திருந்ததாக, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில் அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு தண்டனையை, ஐந்தாண்டு தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட், கடந்த மார்ச் 21-ம் தேதி உத்தரவிட்டது. "ஏற்கனவே, 18 மாதங்கள் சஞ்சய் சிறையிலிருந்துள்ளதால், மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிப்பதற்காக, வரும் 18ம் தேதிக்குள் (நாளை), கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என, சஞ்சய் தத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி தான் நிச்சயம் சரண் அடைவேன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பேட்டியளித்த சஞ்சய் கூறினார். அப்போது அவர் மிகவும் உணர்ச்சிகர வசமாக பேசி கண்ணீர் எல்லாம் விட்டார். இதனிடையே நாளைக்குள் சஞ்சய் தத் சரண் அடைய வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், தற்போது சில படங்களில் நடித்து வருவதாகவும், இதன் படப்பிடிப்புகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், சரண் அடைவதற்கு, ஆறு மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும், சஞ்சய் தத், சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், சவ்கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இன்று(17.04.13) விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த நீதிபதிகள் மனிதாபிமான அடிப்படையில் சஞ்சய் தத்திற்கு மேலும் 4 வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.