பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
உலகையே உலுக்கிய சம்பவம் கோத்ரா ரயில் எரிப்பு. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி அன்று காலை கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மதக்கலவரம் வெடித்தது. இதை மையமாக வைத்து ஹிந்தியில் சில படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இப்போது 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இதை ரஞ்சன் சண்டேல் இயக்கியுள்ளார். இதில் '12-த் பெயில்' படம் மூலம் புகழ்பெற்ற விக்ராந்த் மாசே நாயகனாக நடித்துள்ளார். ராஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் 3ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.