அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
உலகையே உலுக்கிய சம்பவம் கோத்ரா ரயில் எரிப்பு. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி அன்று காலை கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மதக்கலவரம் வெடித்தது. இதை மையமாக வைத்து ஹிந்தியில் சில படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இப்போது 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இதை ரஞ்சன் சண்டேல் இயக்கியுள்ளார். இதில் '12-த் பெயில்' படம் மூலம் புகழ்பெற்ற விக்ராந்த் மாசே நாயகனாக நடித்துள்ளார். ராஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மே மாதம் 3ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.