வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தெலுங்கு திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் மரகதமணி. தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலியின் படங்களில் ஆஸ்தான இசையமைப்பாளராக பணியாற்றி வரும், இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடலுக்காக ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகியவற்றை பெற்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு மீண்டும் ஆஸ்கர் விருது பெற்றுத்தந்த இவருடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
அந்த வகையில் கடந்த வருடம் வெளியான 'சந்திரமுகி 2' படத்திற்கு இசையமைத்த இவர், தற்போது 'ஜென்டில்மேன் 2' படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இன்னொரு பக்கம் பாலிவுட்டில் பிரபல நடிகரும் இயக்குனருமான அனுபம் கெர் இயக்கியுள்ள 'தன்வி தி கிரேட்' என்கிற படத்திற்கு இசையமைத்துள்ளார் மரகதமணி. தமிழில் எம்.எம் கீரவாணி என்கிற பெயரில் இசையமைக்கும் இவர் ஹிந்தியில் எம்எம் க்ரீம் என்கிற பெயரில் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் அனுபம் கெர் கீரவாணியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கூறும்போது, “எனது அனைத்து கனவுகளும் நனவானது. ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வெற்றியாளர், மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான கீரவாணியுடன் நான் இயக்கும் படத்திற்காக இணைந்து பணியாற்றியதில் பெருமை அடைகிறேன். அவருடைய 'தம் மிலே தில் கிலே' பாடலைக் கேட்டதிலிருந்து அவருடைய ரசிகனாக மாறியவன் நான். 'தன்வி தி கிரேட்' படம் உண்மையிலேயே ஆசிர்வாதங்களை பெற்றுள்ளது. உங்களுடைய திறமைக்கும் பெருந்தன்மைக்கும் நன்றி.. ஜெய்ஹோ” என்று கூறியுள்ளார் அனுபம் கெர்.




