தங்கலான் படப்பிடிப்பிற்கு பிறகு 5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன் : மாளவிகா மோகனன் | 'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் |
பாலிவுட் சினிமாவில் சரித்திர படங்களுக்கென்று மினிமம் கியாரண்டி இருப்பது தான் இப்போதைய டிரண்டிங். மாமன்னர் பிருத்விராஜ், ஜான்சி ராணி, அக்பர் உள்ளிட்ட பலரின் சரித்திர கதைகள் சினிமா ஆகின.
அந்த வரிசையில் தற்போது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் சிவாஜி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கிறார். இவரே படத்தை இயக்கவும் செய்கிறார். அவரது மனைவியும், நடிகையுமான ஜெனிலியா தயாரிக்கிறார்.
இதுகுறித்து ரித்தேஷ் தேஷ்முக் கூறும்போது, ''இந்திய சரித்திரத்தில் மகத்தான இடத்தை பிடித்துள்ள மராட்டிய மன்னர் சிவாஜியாக நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படத்தை நானே டைரக்டும் செய்கிறேன். சத்ரபதி சிவாஜி என்ற பெயரே ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் ஆகும். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் அவரது பெயரை கேட்டாலே எமோஷனல் ஆவார்கள்.
இந்திய மண்ணில் பிறந்த மாணிக்கம் அவர். அவரது வாழ்க்கை எதிர்கால தலைமுறைக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை சினிமா படமாக எடுப்பதை பெருமையான விஷயமாக நினைக்கிறேன். எங்களின் இந்த புதிய முயற்சிக்கு அனைவரின் ஆசியும் வேண்டும்'' என்றார்.