5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய அளவில் புகழ் பெற்று தற்போது பாலிவுட் வரை தனது எல்லையை விரிவு படுத்திவிட்டார். அதிலும் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் இன்னும் மிகப்பெரிய அளவில் ராஷ்மிகாவை பாலிவுட் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விட்டது. அதுமட்டுமல்ல மும்பை மீடியாக்களிடமும் எந்தவித பந்தாவும் இன்றி பழகி வருகிறார். குறிப்பாக புகைப்பட கலைஞர்களின் செல்லப் பிள்ளையாகவே ஆகிவிட்டார் ராஷ்மிகா.
இந்த வகையில் சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்தார் ராஷ்மிகா. அந்த நேரத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் அதே விமானத்தில் பயணிக்க வருகை தந்தார். அப்போது கல்யாணியையும் தன்னுடன் சேர்த்து அணைத்தபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடி நடந்தார் ராஷ்மிகா.
அப்போது கல்யாணி யார் என அவர்கள் கேட்க 'இது கல்யாணி பா' என்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் ராஷ்மிகா. இருவரும் ஒன்றாக நடந்து வந்தபோது ஒரு கட்டத்தில் கல்யாணியின் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சித்தார் ராஷ்மிகா. ஆனால் கல்யாணியோ என் பின்னாடி ஒளிய வேண்டாம். என்னை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று சங்கோஜத்துடன் ராஷ்மிகாவிடம் கூறினார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.