கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கடந்த 2014ல் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான படம் ‛1 - நேனொக்கடினே'. இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்தப் படம் கமர்சியல் ஆக்ஷன் படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த கிர்த்தி சனோன் இந்த படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படம் வெளியாகி தற்போது பத்தாம் வருடத்தை தொட்டுள்ளது. படம் மட்டுமல்ல நாயகி கிர்த்தி சனோனுக்கும் இது வெற்றிகரமான பத்தாவது ஆண்டும் கூட.
மகேஷ்பாபுவின் ரசிகர்கள் இந்த படத்தின் அருமை பெருமைகளை பத்தாம் வருடம் கொண்டாட்டமாக சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் நடிகை கிர்த்தி சனோனும் திரையுலகில் தான் பத்து வருடங்களை கடந்துள்ளது குறித்தும் இந்த படம் குறித்தும் நெகிழ்ச்சியாக சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கிர்த்தி சனோன் கூறும்போது, 'நான் சினிமாவில் நுழைந்து பத்து வருடங்கள் ஆயிற்று என்பதை நம்பவே முடியவில்லை. எனது முதல் படமே சூப்பர் ஸ்டார் ஆன உங்களுடன் தான் மகேஷ் பாபு சார்.. பல விஷயங்கள் இன்றும் மறக்க முடியாத நினைவுகளாக என் மனதில் இருக்கின்றன. அதன்பிறகு பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்தபோது எவ்வளவோ விஷயங்கள் மாறி இருந்தாலும் நீங்கள் அப்படியே தான் இருக்கிறீர்கள். நினைவில் வைத்திருக்க கூடிய பல அற்புதமான நிகழ்வுகளையும் கொடுத்ததற்காக உங்களுக்கும் நன்றி சுகுமார் சார்” என்று கூறியுள்ளார்.