நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நடிகைகள் அரசியலுக்கு வருவது புதிது அல்ல. ஷபனா ஆஷ்மி, ஹேமமாலினி, ஜெயப்ரதா என நிறைய இருக்கிறார்கள். இந்த நிலையில் ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித் அரசியலுக்கு வர இருப்பாகவும், வருகிற பார்லிமென்ட் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாகவும் தகவல் வெளியானது. மும்பை, வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா - நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் மாதுரியும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனேயும், மாநில பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலருடன் கலந்து கொண்டனர். இதற்கு பிறகு இந்த தகவல்கள் வேகமாக பரவ ஆரம்பித்தது.
ஆனால் இதனை மாதுரி மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது “நான் அரசியலில் நுழைய இருக்கிறேன் எனத் தகவல் வந்து கொண்டிருப்பது குறித்து நான் அறிவேன். ஆனால், அவை எல்லாம் வெறும் வதந்திதான். நான் எந்தக் கட்சியிலும் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” எனக் கூறியுள்ளார் மாதுரி.