மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

1984ம் ஆண்டு போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் உடல் பாதிப்பு அடைந்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது ரயில்வே ஊழியர்கள் சிலர் சாதுர்யமாக செயல்பட்டதன் காரணமாக பலர் காப்பாற்றப்பட்டனர். உயிரை துச்சமாக நினைத்து செயல்பட்ட அந்த ரயில்வே ஊழியர்களை பற்றி உருவாகி உள்ள தொடர் 'தி ரெயில்வே மேன்'.
இந்த தொடரில் மாதவன், கே.கே.மேனன் திவ்யேந்து சர்மா, பபில்கான் உள்பட பலர் நடித்துள்ளனர். ஷிவ் ராவில் இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம் தயாரித்துள்ளது. இந்த தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளிவரவில்லை. தற்போது நாளை மறுநாள் (18ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போபால் விஷ வாயு கசிவில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இந்த தொடர் மூலம் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள்.