புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
தேசிய விருது பெற்ற 'மணிகர்னிகா' படத்திற்கு பிறகு கங்கனா ரணவத்தின் படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. வசூலையும் தரவில்லை. அதிலும் அவர் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களான டாக்கெட், தலைவி, சந்திரமுகி 2, தற்போது வெளியாகி உள்ள தேஜஸ் படங்கள் போதிய வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. குறிப்பாக 'தேஜஸ்' படம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. போதிய கூட்டம் இன்றி பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
படம் வெளியான 4 நாட்களில் வெறும் 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 60 கோடியில் தயாராகி உள்ள இந்த படம் அந்த பட்ஜெட்டை மீட்காது என்று சினிமா பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் கங்கனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் நாங்கள் வாழ முடியாது” என்று கூறினார்.