லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தேசிய விருது பெற்ற 'மணிகர்னிகா' படத்திற்கு பிறகு கங்கனா ரணவத்தின் படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. வசூலையும் தரவில்லை. அதிலும் அவர் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களான டாக்கெட், தலைவி, சந்திரமுகி 2, தற்போது வெளியாகி உள்ள தேஜஸ் படங்கள் போதிய வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. குறிப்பாக 'தேஜஸ்' படம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. போதிய கூட்டம் இன்றி பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
படம் வெளியான 4 நாட்களில் வெறும் 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 60 கோடியில் தயாராகி உள்ள இந்த படம் அந்த பட்ஜெட்டை மீட்காது என்று சினிமா பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் கங்கனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் நாங்கள் வாழ முடியாது” என்று கூறினார்.