கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து தெலுங்கில் 2021ல் வெளிவந்த படம் 'புஷ்பா'. சுமார் 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம். அப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்துள்ளது.
ஷாரூக் நடித்து வெளிவந்த 'ஜவான்' படத்தைப் பார்த்து பாராட்டி டுவீட் ஒன்றைப் போட்டிருந்தார் அல்லு அர்ஜுன். அதற்கு பதிலளித்த ஷாரூக், “மிக்க நன்றி என் மனிதனே. உங்களது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. அன்பானவர். ஒரு நெருப்பே என்னைப் புகழ்கிறது. இன்று எனது நாள் சிறப்பானது. ஜவானை இப்போது இருமுறை உணர்கிறேன். மூன்று நாட்களில் 'புஷ்பா'வை மூன்று முறை பார்த்ததால் உங்களிடமிருந்து நான் ஏதாவது கற்றுக்கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். உங்களைக் கட்டிப்பிடிக்கிறேன், விரைவில் வந்து தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஒன்றைத் தருவேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'புஷ்பா' படத்தை ஷாரூக்கே மூன்று முறை பார்த்துள்ளார் என்பதை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 'ஜவான்' படத்திற்கு அடுத்தடுத்து பல சினிமா பிரபலங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஏறக்குறைய அனைவருக்குமே சீக்கிரத்திலேயே பதில் தெரிவித்து நன்றி கூறி வருகிறார் ஷாரூக்கான்.