25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பாலிவுட் தயாரிப்பாளரான சந்தீப் சிங் இந்த வருடம் மே மாதம் 'திப்பு' (ஹஸ்ரத் திப்பு சுல்தான்) என்ற படத்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார். திப்பு சுல்தான் பற்றிய உண்மை சம்பவங்களை படத்தில் சொல்லப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அவரது பட அறிவிப்புக்கு அப்போதிருந்தே எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அப்படத் தயாரிப்பைக் கைவிடுவதாக சந்தீப் சிங் நேற்று அறிவித்துள்ளார்.
அது பற்றிய அறிக்கையில், “ஹஸ்ரத் திப்பு சுல்தான்' பற்றிய படம் உருவாக்கப்படாது. எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் என்னை அச்சுறுத்துவதையோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதையோ தவிர்க்குமாறு எனது சக சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் வேண்டுமென்றே யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எல்லா நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக நம்புவதால், அவ்வாறு செய்வது எனது நோக்கமாக இருந்ததில்லை.
இந்தியர்களாகிய நாம் என்றென்றும் ஒற்றுமையாக இருப்போம், எப்போதும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தியில் வெளியான “அலிகார், சர்ப்ஜித், பூமி, பிஎம் நரேந்திரமோடி, ஜுன்ட்” ஆகிய படங்களைத் தயாரித்தவர் சந்தீப் சிங்.