பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிர்த்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆதி புருஷ். ஒரு சில வாரத்திற்கு முன்பு திரைக்கு வந்த இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு தரப்பினர் கொண்டாடினாலும் மற்றொரு தரப்பினர் படத்தின் கிராபிக்ஸ் சரியில்லை, அவர்களின் தோற்றம் மற்றும் வசனங்கள் குறித்து விமர்சனம் எழுந்தது. இதனால் படத்தின் வசூலும் சற்றென்று குறைந்தது. இந்தநிலையில் ஆதி புருஷ் படத்தை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அவரது டுவிட்டரில் "ஆதி புருஷ் பார்த்த பிறகு தான் புரிந்தது பாகுபலி படத்தில் ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.