மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆர்யன் கானை விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 25 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் அப்போது போதை பொருள் தடுப்பு அதிகாரியாக இருந்த சமீர்வான்கடே உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
தற்போது சென்னையில் வரி செலுத்துவோர் சேவை பிரிவு தலைமை அதிகாரியாக பணியாற்றி வரும் சமீர்வான்கடே சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் இரண்டு நாட்களாக தினமும் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும் முன் அவரை பேட்டி எடுக்க மீடியாக்கள் முயன்றன அப்போது அவர் “நீதிதுறையின் மீது நம்பிக்கை உள்ளது” என்று மட்டும் கூறிச் சென்றார். முன்னதாக அவர் பிரபாதேவியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.