அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதை விருந்தில் கலந்து கொண்டதாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் போதை மருந்து பயன்படுத்தவில்லை என்று விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆர்யன் கானை விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 25 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் அப்போது போதை பொருள் தடுப்பு அதிகாரியாக இருந்த சமீர்வான்கடே உள்ளிட்ட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
தற்போது சென்னையில் வரி செலுத்துவோர் சேவை பிரிவு தலைமை அதிகாரியாக பணியாற்றி வரும் சமீர்வான்கடே சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் இரண்டு நாட்களாக தினமும் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும் முன் அவரை பேட்டி எடுக்க மீடியாக்கள் முயன்றன அப்போது அவர் “நீதிதுறையின் மீது நம்பிக்கை உள்ளது” என்று மட்டும் கூறிச் சென்றார். முன்னதாக அவர் பிரபாதேவியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.