பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ஹிந்தியில் உருவாகி உள்ள ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த சில தினங்களாகவே கேரளாவையும் தாண்டி நாடெங்கிலும் பரபரப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. ஹிந்து அப்பாவி பெண்களை லவ் ஜிகாத் என்கிற பெயரில் இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவர்களை ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் தொழிலாளிகளாக அனுப்பி வைக்கப்படுவதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தை திரையிடக்கூடாது எனக் கூறி சில அமைப்புகளிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் இந்த படத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுத்து விட்டது. அதுமட்டுமல்ல இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
கடந்த வெள்ளியன்று போலீசார் பாதுகாப்புடன் இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் இந்த படத்திற்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த படம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதால் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள், குறிப்பாக மகள்களுடன் சென்று இந்த படத்தை பார்ப்பதற்கு வசதியாக வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.