பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான்கான் ஐம்பது வயதை கடந்த பின்னரும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலராகவே வலம் வருகிறார். அதே சமயம் கடந்த 25 வருடங்களில் தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கவும் இவர் தவறவில்லை. ஆனால் அப்படி இவருடன் கிசுகிசுக்கப்பட்ட அனைத்து கதாநாயகிகளும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது சல்மான்கான் நடிப்பில் வெளியாகி உள்ள ‛கிஸி கா பாய் கிஸி கி ஜான்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சல்மான்கானிடம் அவரது காதல் ராசி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சல்மான்கான், "காதலுக்கும் எனக்கும் ராசியில்லை. என்னை காதலன் (ஜான்) என்று அழைக்க வேண்டியவர் அண்ணா (பாய்) என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்" என வேடிக்கையாக கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் நடிக்க துவங்கிய சமயத்தில் இருந்தே, கடந்த சில மாதங்களாக சல்மான்கானுக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் காதல் என்று மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது சல்மான் கான் இப்படி கூறியுள்ளது பூஜா ஹெக்டேவை மனதில் வைத்து தானா என்று சோஷியல் மீடியாவில் மீண்டும் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது.