வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா சமீப காலமாகவே தனது பேட்டிகளில் பரபரப்பாக பல விஷயங்களை கூறி வருகிறார். குறிப்பாக பாலிவுட் திரையுலகில் இருந்து தன்னை ஓரங்கட்ட பலர் முயற்சி செய்தனர் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பாத்ரூமில் அமர்ந்து பல நாட்கள் தனது மதிய உணவை சாப்பிட்டதாக இன்னொரு தகவலை கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுபற்றி அவர் கூறும்போது, தான் அமெரிக்காவில் தனது மேல்நிலைப்பள்ளி படிப்பை மேற்கொள்வதற்காக சென்றபோது அந்த கலாச்சாரத்துடன் தன்னால் உடனடியாக ஒன்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.
குறிப்பாக கேண்டீனுக்கு சென்று தனக்கு தேவையான உணவை வாங்கி அங்கிருக்கும் மற்றவர்களுடன் அமர்ந்து உண்பதற்கு கூட ரொம்பவே கூச்சமாக இருந்தது என்றும் அதனால் அங்கே இருந்த ஒரு வெண்டிங் மிஷினில் இருந்து தனக்கு தேவையான சிப்ஸ் பாக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள பாத்ரூமிற்கு சென்று யாரும் அறியாத வண்ணம் தனது மதிய உணவை பல நாட்கள் சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா. பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கலாச்சாரத்திற்கு பழகி அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாறி அங்குள்ளவர்களுடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு தன்னை மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.