சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | ‛96' இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா : பிரேம் குமார் மறுப்பு | ‛லப்பர் பந்து' ரீமேக்கில் ஷாருக்கான் : சுவாசிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷ் உடன் மோதும் அதர்வா? | சிம்பு எடுத்த முடிவு | ரவி மோகன் இயக்கத்தில் நடிப்பது எப்போது : யோகி பாபு பதில் | 100வது நாளில் 'டிராகன்' | நித்திலன் சுவாமிநாதனை அழைத்து பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் | ஹாலிவுட் படத்தில் நடிக்கும் திஷா பதானி | பிரதமர் அணிவித்த சால்வை : இளம் பாடகி ஸ்ரீநிதா நெகிழ்ச்சி |
பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா சமீப காலமாகவே தனது பேட்டிகளில் பரபரப்பாக பல விஷயங்களை கூறி வருகிறார். குறிப்பாக பாலிவுட் திரையுலகில் இருந்து தன்னை ஓரங்கட்ட பலர் முயற்சி செய்தனர் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பாத்ரூமில் அமர்ந்து பல நாட்கள் தனது மதிய உணவை சாப்பிட்டதாக இன்னொரு தகவலை கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுபற்றி அவர் கூறும்போது, தான் அமெரிக்காவில் தனது மேல்நிலைப்பள்ளி படிப்பை மேற்கொள்வதற்காக சென்றபோது அந்த கலாச்சாரத்துடன் தன்னால் உடனடியாக ஒன்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.
குறிப்பாக கேண்டீனுக்கு சென்று தனக்கு தேவையான உணவை வாங்கி அங்கிருக்கும் மற்றவர்களுடன் அமர்ந்து உண்பதற்கு கூட ரொம்பவே கூச்சமாக இருந்தது என்றும் அதனால் அங்கே இருந்த ஒரு வெண்டிங் மிஷினில் இருந்து தனக்கு தேவையான சிப்ஸ் பாக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள பாத்ரூமிற்கு சென்று யாரும் அறியாத வண்ணம் தனது மதிய உணவை பல நாட்கள் சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா. பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கலாச்சாரத்திற்கு பழகி அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாறி அங்குள்ளவர்களுடன் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு தன்னை மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.