சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

பாலிவுட் நடிகை கிரிசன் பெரிரா. இவர் கடந்த 1ம் தேதி வெப் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக விமானத்தில் சார்ஜா சென்றார். அப்போது அவரிடம் போதை பொருள் இருந்ததாக போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது அவர் சார்ஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கிரிசனின் தாய் பிரமிளா மும்பை போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன் மகள் போதை பொருள் கடத்தவில்லை என்றும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தார்.
இந்த விசாரணையில் ஆண்டனி பால் என்பவர் தனது நண்பர் ராஜேஷ் மூலம் நடிகை கிரிசனிடம் போதை பொருள் பார்சலை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆண்டனி பால், ராஜேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் நடிகையை பழிவாங்க அவரை போதை வழக்கில் சிக்க வைத்ததை ஒப்புக் கொண்டனர். இதனால் மும்பை போலீசார் தற்போது சார்ஜா சிறையில் இருக்கும் நடிகையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.