யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
பாலிவுட் நடிகை கிரிசன் பெரிரா. இவர் கடந்த 1ம் தேதி வெப் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக விமானத்தில் சார்ஜா சென்றார். அப்போது அவரிடம் போதை பொருள் இருந்ததாக போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது அவர் சார்ஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கிரிசனின் தாய் பிரமிளா மும்பை போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தன் மகள் போதை பொருள் கடத்தவில்லை என்றும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தார்.
இந்த விசாரணையில் ஆண்டனி பால் என்பவர் தனது நண்பர் ராஜேஷ் மூலம் நடிகை கிரிசனிடம் போதை பொருள் பார்சலை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆண்டனி பால், ராஜேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் நடிகையை பழிவாங்க அவரை போதை வழக்கில் சிக்க வைத்ததை ஒப்புக் கொண்டனர். இதனால் மும்பை போலீசார் தற்போது சார்ஜா சிறையில் இருக்கும் நடிகையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.