
மக்களின் நம்பிக்கை தலைவர் மோடி: அமீர்கான் புகழாரம்
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர்கான் பேசியதாவது: "மன் கி பாத்" நிகழ்ச்சி, ஒரு தலைவர், பொதுமக்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கான முக்கியமான சாதனம். பிரதமர் மோடியை மக்கள் நம்புகிறார்கள். மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துகிறார். ஒரு தலைவர், தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை மக்களிடம் தெரிவித்து, அவர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் முக்கியம். இது எந்த தலைவருக்கும் அடிப்படை தேவை. இந்நிகழ்ச்சி, மக்கள் இயக்கமாக நடக்கிறது. மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை ரவீணா டாண்டன் பேசியதாவது: "மன் கி பாத்" மூலம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் பிரதமர் தொட்டு வருகிறார். கண்டுகொள்ளப்படாத நாயகர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறார். கட்டுப்பாடுகளை உடைத்து பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கிறார்கள். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!