வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் | ‛ஏஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது! |
பாலிவுட் நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுவது அனைவருக்கும் தெரியும் காரணம். ஹிந்தியில் தயாராகும் படங்களுக்கு 8 மாநிலங்களில் வியாபாரம் இருக்கிறது. வெளிநாடுகளிலும் இந்தி படங்களுக்கு வரவேற்பு இருக்கும். இதன் காரணமாக நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.
தற்போது பெரும்பாலான இந்தி படங்கள் பான் இந்தியா படமாக தயாராவதால் சம்பளத்தை மேலும் அதிரடியாக உயர்த்தி உள்ளார்கள். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோன் ஹாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடியும், பாலிவுட் படங்களில் நடிக்க 10 கோடியும் சம்பளமாக பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'பதான்' படம் ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு தீபிகா படுகோனின் கவர்ச்சியும், சண்டைக் காட்சிகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் தற்போது தனது சம்பளத்தை 18 கோடியாக உயர்த்தி விட்டார். தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் 'ப்ராஜெக்ட் கே' என்ற படத்தில் நடிக்க தீபிகா 18 கோடி சம்பளம் வாங்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர அமிதாப்பச்சன், திஷா பதானி ஆகியோரும் நடிக்கிறார்கள். இது சுமார் 500 கோடி செலவில் தயாராகும் பான் இந்தியா படமாகும்.