சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் காஷ்மீர் பைல்ஸ். இந்த படத்தை விவேக் அக்னிஹோத்ரி என்பவர் இயக்கியிருந்தார். தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களையும், அதனால் பாதிக்கப்பட்ட பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.. அதனாலேயே பாலிவுட்டையும் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படம் இன்று தியேட்டர்களில் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது
காஷ்மீரில் கடந்த 1990-ல் கிட்டத்தட்ட 32 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதின் நினைவு தினமான இன்று (ஜன-19 ) இந்த படத்தை மீண்டும் வெளியிடுவது சரியானதாக இருக்கும் என்பதாலேயே இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளதாக இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கூறியுள்ளார். இந்த படத்தை தியேட்டரில் பார்க்காமல் மிஸ் பண்ணியவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ள இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, ஒரு படம் வெளியான ஒரு வருடத்திற்குள்ளேயே இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்யப்படும் சாதனையையும் காஷ்மீர் பைல்ஸ் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.