100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

நடிகர் ஷாருக்கான் வெளிநாட்டு விமான நிலையங்களில் ஓரிருமுறை விசாரணை மற்றும் சோதனை என்கிற பெயரில் காக்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் என்கிற செய்தி பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதேசமயம் நேற்று முன்தினம் துபாயிலிருந்து தனது குழுவினருடன் மும்பை விமான நிலையம் வந்திறங்கிய ஷாருக்கான் சுங்க அதிகாரிகளால் ஒருமணி நேரம் வரை காத்திருக்க வைக்கப்பட்டார். காரணம் ஷாருக்கானுடன் பயணித்தவர்களில் அவரது பாதுகாவலரான ரவிசங்கர் சிங் என்பவர் கொண்டுவந்த லக்கேஜில் 17.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்தன. அதற்கான சுங்கவரி செலுத்தப்படவில்லை.
அதேசமயம் இவர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியதால் அந்த சமயத்தில் சுங்க வரி செலுத்தும் கவுன்ட்டர்கள் செயல்படாமல் மூடியிருந்தன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமான நிலையில் ஷாருக்கானின் பாதுகாவலர் தவிர மற்ற 5 பேரையும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதிகாலையில் கவுன்ட்டர்கள் செயல்பட துவங்கிய பின்னர் சுங்க வரியாக சுமார் 6.88 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டு ஷாருக்கானின் பாதுகாவலர் ரவிசங்கர் சிங் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.