ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் ஷாருக்கான் வெளிநாட்டு விமான நிலையங்களில் ஓரிருமுறை விசாரணை மற்றும் சோதனை என்கிற பெயரில் காக்க வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் என்கிற செய்தி பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதேசமயம் நேற்று முன்தினம் துபாயிலிருந்து தனது குழுவினருடன் மும்பை விமான நிலையம் வந்திறங்கிய ஷாருக்கான் சுங்க அதிகாரிகளால் ஒருமணி நேரம் வரை காத்திருக்க வைக்கப்பட்டார். காரணம் ஷாருக்கானுடன் பயணித்தவர்களில் அவரது பாதுகாவலரான ரவிசங்கர் சிங் என்பவர் கொண்டுவந்த லக்கேஜில் 17.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்தன. அதற்கான சுங்கவரி செலுத்தப்படவில்லை.
அதேசமயம் இவர்கள் நள்ளிரவு 12 மணி அளவில் மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியதால் அந்த சமயத்தில் சுங்க வரி செலுத்தும் கவுன்ட்டர்கள் செயல்படாமல் மூடியிருந்தன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமான நிலையில் ஷாருக்கானின் பாதுகாவலர் தவிர மற்ற 5 பேரையும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அதிகாலையில் கவுன்ட்டர்கள் செயல்பட துவங்கிய பின்னர் சுங்க வரியாக சுமார் 6.88 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டு ஷாருக்கானின் பாதுகாவலர் ரவிசங்கர் சிங் அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.