அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
தமிழ், தெலுங்கில் சில வருடங்கள் முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. கடந்த சில வருடங்களாக அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் வெற்றிப் படங்களில் நடித்தவர் தமன்னா.
தற்போது அவர் ஹிந்தியில் சில படங்களில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் நடித்துள்ள 'பப்லி பவுன்சர்' என்ற படம் இந்த வாரம் செப்டம்பர் 23ம் தேதி ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தை ஹிந்தியில் 'சாந்தினி பார், பேஜ் 3, கார்ப்பரேட், பேஷன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மதுர் பண்டார்கர் இயக்கியுள்ளார். படம் பற்றியும், தமன்னா பற்றியும் அவர் சுவாரசியத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
“தமன்னா மிகவும் கடின உழைப்பாளி, திறமைசாலி. அவர் இதற்கு முன்பு நடித்த படங்களை நான் பார்த்ததில்லை. 'பாகுபலி' படத்தையும் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததால் ஞாபகமில்லை. ஒரு நடிகையைப் பார்க்கும் போது அவர் எனது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பாரா என்றுதான் பார்ப்பேன். அப்படி தமன்னாவைப் பார்த்த போது அவர் எனது பப்லி கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன். நிஜ வாழ்க்கையில் நான் காமெடியான ஒரு மனிதன். ஆனால், 'சாந்தினி பார்' படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை 'டார்க் சினிமா' மட்டுமே எடுப்பேன் என நினைக்க ஆரம்பித்தார்கள். இந்தப் படத்தில் தமன்னா வந்ததும், நகைச்சுவைப் படமாக எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.