புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் |
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை மருந்து பயன்படுத்திய விருந்து நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கானும் கலந்து கொண்டார் என்ற குற்றத்திற்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரை கைது செய்தார்கள். அதையடுத்து நடந்த தீவிர விசாரணைக்கு பிறகு ஆரியன்கான் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை ஷாருக்கான் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட பிறகு ஆரியன்கானுக்கு ஜாமீன் கிடைத்தது.
அது குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் பின்னர் ஆரியன்கான் போதை மருந்து எதுவும் பயன்படுத்தவில்லை. அவரிடமிருந்து எந்த போதை பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று சொல்லி இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதேசமயம் அவரின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. பாஸ்போர்ட்டை திரும்ப வழங்கும்படி ஆர்யன் கான் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆர்யன் கானின் பாஸ்போர்ட்டை திருப்பி அவரிடமே அளிக்க உத்தரவிட்டுள்ளது.