டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோடை வெயிலின் உக்கிரத்தில் எங்காவது குளம், குட்டை, ஏரிக்குச் சென்று நாள் முழுவதும் தண்ணீரிலேயே இருக்க வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால், கோடைக் காலங்களில் நீச்சல் குளங்களைத் தவிர வேறு எங்கும் தண்ணீரைப் பார்ப்பது அரிது. இந்த கோடைக் காலத்தில் அபூர்வமாக சில ஏரி, குளங்களில் தண்ணீர் இருக்கிறது. கோடை மழையின் தாக்கத்தால் வந்தவை அவை.
நமக்குத்தான் ஏரி, குளங்கள் தேவை. ஆனால், பிகினியில் ஒய்யாரமாய் போஸ் கொடுக்க நினைக்கும் நடிகைகளுக்கு மாலத்தீவு, கோவா, நட்சத்திர ஓட்டல் நீச்சல் குளங்கள் போதும். கடந்த இரண்டு வருடங்களாக மாலத்தீவு பிகினி புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்களுக்கு போரடித்துவிட்டது.
அதனால்தான் பாலிவுட்டின் முக்கிய வாரிசு நடிகையான சாரா அலிகான் துருக்கி இஸ்தான்புல்லுக்குப் பறந்துவிட்டார் போலிருக்கிறது. தனது தோழிகளுடன் இஸ்தான்புல்லில் உள்ள ஹோட்டல் நீச்சல் குளத்திலிருந்து ஒரு வண்ண மயமான பிகினி அணிந்து போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இந்த வண்ணமயமான பிகினி ஆடையில் சாரா எத்தனை பேரை சாய்க்கப் போகிறாரோ?